திருப்பத்தூரில் மறுவாக்குப்பதிவு கோரிய மனு தள்ளுபடி!
புதுக்கோட்டை திருப்பத்தூர் தொகுதியில் மறுவாக்குப்பதிவு நடத்தக்கோரிய மனு தள்ளுபடி
புதுக்கோட்டை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் மறுவாக்குப்பதிவு நடத்தக்கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தமிழகத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதியில் ஒரே கட்டமாக நடந்து முடிந்த நிலையில், மே 4-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
இதனிடையே, புதுக்கோட்டையில் ஆர்.பாலகுறிச்சி, சீகம்பட்டி, ரெகுநாதபட்டி, கோபால் பட்டி, வைரவன்பட்டி, விடத்தலான்பட்டி ஆகிய 6 கிராமங்களையும் திருப்பத்தூர் தொகுதியுடன் சேர்க்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் தேர்தலை புறக்கணித்தனர்.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, திருப்பத்தூர் தொகுதிக்கு உட்பட்ட 6 கிராமங்களைச் சேர்ந்த 2,012 பேர் வாக்களிக்கவில்லை எனவும், 3 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் லட்சுமணன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தேர்தல் முடிந்த பிறகு எப்படி வாக்களிக்க அனுமதிக்க முடியும் என கேள்வியெழுப்பிய நீதிபதி அமர்வு, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
TN Polls 2026: Petition seeking re-polling in Tirupattur dismissed
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.