சேலம்

சங்ககிரி அருள்மிகு வஸந்தவல்லபராஜபெருமாள் கோயிலில் பரமபதவாசல் திறப்பு 

DIN

சங்ககிரி அருள்மிகு வஸந்தவல்லபராஜபெருமாள் கோயிலில் பரமபதவாசல் திறப்பு விழா நடைபெற்றது. 

சங்ககிரி, வி.என்.பாளையத்தில் உள்ள ஸ்ரீ வஸந்தவல்லி உடனமர் ஸ்ரீ வஸந்தவல்லபராஜப்பெருமாள் கோயிலில் வைகுந்த ஏகாதசியையொடட்டி பரமபதவாசல் திறப்பு விழா திங்கள்கிழமை அதிகாலை நடைபெற்றது. 

வைகுந்த ஏகாதசியையொட்டி ஸ்ரீ வஸந்தவல்லி உடனமர் ஸ்ரீ வஸந்தவல்லபராஜப்பெருமாள் கோயிலில் அருள்மிகு வசந்தவல்லபராயபெருமாள் சுவாமிக்கு அதிகாலையிலேயே சிறப்பு அபிஷேகங்கள், அலங்கராம் செய்யப்பட்டு உற்சவ மூர்த்தி சுவாமி கருடவாகனத்தில் வைத்து அலங்கரிக்கப்பட்டார். 

தொடர்ந்து மார்கழி மாத தினசரி வழிபாடான திருப்பாவை பாடல்களை பாடிய பின்னர் சுவாமி அதிகாலை பரமபதவாசல் வழியாக  வெளியே வந்தார்.  வெளியே வந்த  சுவாமியை பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்ற கோஷம் முழங்க வரவேற்று வழிபட்டனர்.  அதனையடுத்து பட்டாச்சாரியர்கள் சுவாமி பரமபதவாசல் வழியாக வந்தப் பின்னர் பெருமாள் சிறப்பு பக்தி பாடல்களை பாடினர். 

இதனையடுத்து சுவாமி கோயில் வெளி பிரகாரத்தில் வலம் வந்து ஆலயத்தை அடைந்தது. சுவாமி பரதபதவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த போது பெண்கள் சுவாமிக்கு ஆரத்தி எடுத்து வரவேற்று வழிப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

கர்நாடகத்தில் 20 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும்: சித்தராமையா நம்பிக்கை

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

SCROLL FOR NEXT