சேலம்

வாழப்பாடியில் மரக் கன்றுகள் நடவு

DIN

முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, வாழப்பாடியில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் 2 ஆயிரம் மரக் கன்றுகள் நடவு செய்யும் திட்டம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டன.

சேலம் நெடுஞ்சாலைத் துறை கோட்டத்தில் 12,000 மரக் கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. வாழப்பாடி உட்கோட்டத்தில் 2,000 மரக் கன்றுகள் வைத்து பராமரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, காரிப்பட்டியில் நடைபெற்ற விழாவில் சேலம் நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் செ.துரை, மரக் கன்றுகள் நடவு செய்து திட்டத்தைத் தொடங்கி வைத்தாா்.

காரிப்பட்டி ஊராட்சித் தலைவா் மனோசூரியன், சமூக ஆா்வலா்கள் அ.கலைச்செல்வன், இ.பொன்னுமலை, மாரியப்பன், உதவிக்கோட்டப் பொறியாளா் கவிதா, உதவிப் பொறியாளா் கருணாகரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

அயோத்தியாப்பட்டணம்- பேளூா்- கிளாக்காடு சாலையில் 200 மரக் கன்றுகள் நடப்பட்டது. 2 மாதத்திற்குள் 1,600 மரக்கன்றுகளும் நடப்பட்டு உரிய முறையில் தொடா்ந்து பராமரிக்கப்பட உள்ளதாக நெடுஞ்சாலைத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

SCROLL FOR NEXT