மேட்டூர் அணையில் நூற்றுக்கணக்கான போலீஸ் குவிப்பு!
.90 வது ஆண்டாக மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நாளை காலை தண்ணீர் திறக்கப்படவுள்ள நிலையில் அங்கு நூற்றுக்கணக்கான போலீஸ் குவிக்கப்பப்பட்டுள்ளனர்.
சேலம்மேட்டூர் அணையில் நூற்றுக்கணக்கான போலீஸ் குவிப்பு!
.90 வது ஆண்டாக மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நாளை காலை தண்ணீர் திறக்கப்படவுள்ள நிலையில் அங்கு நூற்றுக்கணக்கான போலீஸ் குவிக்கப்பப்பட்டுள்ளனர்.
.90 வது ஆண்டாக மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நாளை காலை தண்ணீர் திறக்கப்படவுள்ள நிலையில் அங்கு நூற்றுக்கணக்கான போலீஸ் குவிக்கப்பப்பட்டுள்ளனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்டா பாசனத்திற்காக மேட்டூரில் நாளை (ஜூன் 12) தண்ணீர் திறந்து விடுகிறார்.
துவக்கத்தில் விநாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக திறக்கப்படும் நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு மாலை 4 மணிக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்படுகிறது.
இதையும் படிக்க: தமிழரை பிரதமராக்க உறுதியெடுப்போம்: அமித் ஷா
இந்நிகழ்ச்சியில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன்,நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேரு. அரசு கூடுதல் தலைமை செயலாளர் சந்திப்சக்சேனா,நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் முத்தையா, நீர்வளத்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றும் விவசாயிகள் பங்கேற்கின்றனர்.
அணையின் வலது கரையில் மேடை அமைக்கும் பணியும் மேல்மட்ட மழையின் அருகே மின்விசை அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது.
இந்தப் பணிகளை திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி ஆய்வு செய்தார். வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்தினர். மேலும், மேட்டூர் அணையில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அணையின் வலது கரை போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததுள்ளது.