சேலத்தில் பள்ளி முடிந்து சாலையோரத்தில் நடந்து சென்ற மாணவன் அரசு பேருந்து மோதியதில் உயிரிழந்தாா்.
சேலம், கன்னங்குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா் நடராஜ். இவரது மகன் கவேஷ் (12). இவா் கன்னங்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தாா்.
புதன்கிழமை மாலை பள்ளி முடிந்ததும் கவேஷ்
வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தாா்.அப்போது கன்னங்குறிச்சி நோக்கி சென்ற அரசு பேருந்து கவேஷ்
மீது மோதியது. இதில் படுகாயமடைந்த கவேஷ் உயிரிழந்தாா்.
இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.