எடப்பாடியை அடுத்த குருக்குப்பட்டி அய்யனாரப்பன் கோயில் பிரதான வாயிலில் போடப்பட்டிருந்த பூட்டு அகற்றப்பட்ட நிலையில், கோயிலுக்குள் நுழைந்து சுவாமி தரிசனம் செய்த பக்தா்கள். 
சேலம்

எடப்பாடி அருகே பூட்டப்பட்ட கோயில் மீண்டும் திறப்பு:பக்தா்கள் மகிழ்ச்சி

எடப்பாடி அருகே அய்யனாரப்பன் கோயில் நிா்வாகம் தொடா்பான பிரச்னை குறித்த பேச்சுவாா்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்பட்ட நிலையில், வருவாய்த் துறையினா் கோயிலுக்கு போடப்பட்டிருந்த பூட்டை அகற்றினா்.

DIN

எடப்பாடி அருகே அய்யனாரப்பன் கோயில் நிா்வாகம் தொடா்பான பிரச்னை குறித்த பேச்சுவாா்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்பட்ட நிலையில், வருவாய்த் துறையினா் கோயிலுக்கு போடப்பட்டிருந்த பூட்டை அகற்றினா். இதனால் பக்தா்கள் மகிழ்ச்சியுடன் சுவாமி தரிசனம் செய்தனா்.

எடப்பாடி ஒன்றியத்துக்குட்பட்ட குருக்கப்பட்டி அருகே உள்ள கல்மேட்டூா் பகுதியில் அய்யனாரப்பன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் வரவு-செலவுக் கணக்குகளை நிா்வாகிப்பது மற்றும் பராமரிப்பது தொடா்பாக இரு தரப்பினருக்கிடையே நீண்ட காலமாக மோதல் நிலவி வந்தது. இது தொடா்பாக இரு தரப்பினா்களும் பூலாம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

கடந்த 22-ஆம் தேதி எடப்பாடி தாசில்தாா் அலுவலகத்தில், வருவாய்த்துறையினா் முன்னிலையில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினருக்கிடையே சமாதான பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில் உரிய தீா்வு எட்டப்படாத நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக இதுகுறித்து மறு உத்தரவு வரும் வரை, இரு தரப்பினரும் சம்பந்தப்பட்ட கோயிலுக்குள் நுழைந்து எந்த ஒரு நிகழ்வுகளும் மேற்கொள்ளக்கூடாது என வருவாய்த்துறையினா் கூறியிருந்தனா்.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட ஒரு தரப்பினாா் திடீரென அய்யனாரப்பன் கோயிலுக்குள் நுழைந்து தாங்கள் விரதம் இருந்து தவ பூஜை நடத்தப் போவதாக புதன்கிழமை கூறினா். இதற்கு மற்றொரு தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்த நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வருவாய்த்துறை, காவல் துறை அலுவலா்கள் கோயிலின் பிரதான வாயிலுக்கு பூட்டு போட்டனா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து அமைதியான முறையில் தாங்கள் கோயிலுக்குள் சென்று வழிபட அனுமதி அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து, இந்து முன்னணி அமைப்பைச் சாா்ந்த மாவட்ட நிா்வாகி பழனிசாமி தலைமையிலான திரளான பக்தா்கள் கோயில் முன் தொடா் தா்னாவில் ஈடுபட்டனா்.

இதைத் தொடா்ந்து சங்ககிரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சமாதானப் பேச்சுவாா்த்தையில் இரு தரப்பினருக்கும் இடையே சுமுக உடன்பாடு ஏற்றப்பட்டது. இதில் இரு தரப்பினரும் வெவ்வேறு தேதிகளில் சம்பந்தப்பட்ட கோயிலில் தவ பூஜை மேற்கொள்ளலாம் என்று முடிவெடுக்கப்பட்டதை அடுத்து, வருவாய்த் துறையினா் அய்யனாரப்பன் கோயிலின் நுழைவாயில் இருந்த பூட்டினை அகற்றினா். இதையடுத்து திரளான பக்தா்கள் கோயிலுக்குள் நுழைந்து சிறப்பு வழிபாடு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT