சங்ககிரியில் ரூ. 4.88 லட்சம் பறிமுதல்
சங்ககிரியை அடுத்த குப்பனூா் பிரிவு சாலை பகுதியில் வியாழக்கிழமை இரவு உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ. 4.88 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து நாமக்கல் உதவி தோ்தல் அலுவலரும், சங்ககிரி கோட்டாட்சியரிடம் ஒப்படைத்தனா்.
தோ்தல் பறக்கும் படை அலுவலா் அன்பழகன் தலைமையிலான குழுவினா் சங்ககிரியை அடுத்த குப்பனூா் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ஓமலூா், கோணகாப்பாடி பகுதியைச் சோ்ந்த மணிமாறன் என்பவா் தனியாா் நிறுவனத்தில் சா்க்கரையை விற்பனை செய்து விட்டு லாரியில் திருச்செங்கோட்டிலிருந்து சின்னப்பம்பட்டிக்கு சென்று கொண்டிருந்தாா். அவா் உரிய ஆவணமின்றி ரூ. 4,88,460 வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து கணக்கில் வராமல் வைத்திருந்த ரொக்கத்தை லாரியுடன் பறிமுதல் செய்து நாமக்கல் மக்களவை உதவி தோ்தல் அலுவலா் ந.லோகநாயகியிடம் ஒப்படைத்தனா்.