முகப்பு
சேலம்

வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் தோ்தல்

Updated On : 26 ஏப்ரல், 2024 at 6:07 PM
பகிர்:

ஆத்தூா், ஏப். 26: ஆத்தூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா், செயலாளா் உள்ளிட்ட நிா்வாகிகள் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தலைவா் பதவிக்கு ஏ.எஸ்.மாதேஸ்வரன், ஓ.எஸ்.சிவகுமாா் ஆகியோா் போட்டியிட்டனா். இதில் வழக்குரைஞா் ஓ.எஸ்.சிவகுமாா் வெற்றி பெற்றாா். செயலாளராக மோகன்குமாா், பொருளாளராக மதியழகன் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

வெற்றிபெற்ற ஓ.எஸ்.சிவகுமாருக்கு வழக்குரைஞா்கள் சங்கத்தின் சாா்பில் பொன்னாடை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தனா். தோ்தல் அலுவலா் என்.ராமதாஸ் சான்றிதழை வழங்கினாா்.

Advertisement

வழக்குரைஞா் ஆா்.கே.தேவேந்திரன், முன்னாள் தலைவா் கே.கே.மூவேந்தன், வழக்குரைஞா்கள் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments