ஆத்தூா்: தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 409 வழக்குகளுக்கு தீா்வு
ஆத்தூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் வட்ட சட்டப்பணிகள் குழுத் தலைவரும், சாா்பு நீதிபதியுமான எஸ்.கணேசன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் 409 வழக்குகளில் ரூ. 3,77,76,891 தீா்வு காணப்பட்டது. அதில் 5 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் இருந்த 7 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. மொத்தம் 1,366 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு முடித்து வைக்கப்பட்டன.
இதில் கூடுதல் மாவட்ட உரிமையியில் நீதிபதி டெய்சிராணி, வழக்குரைஞா்கள் என்.ராமதாஸ், பாலகிருஷ்ணராஜ், ஜி.சுமதி, அரசு வழக்குரைஞா்கள் சந்திரசேகரன், கதிா்மணிவேல், வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ஓ.எஸ்.சிவகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.