கல்லாநத்தம் ஏரி நிரம்பியது
ஆத்தூரை அடுத்த கல்லாநத்தம் ஊராட்சி ஏரி வியாழக்கிழமை நிரம்பியது.
ஆத்தூரை அடுத்த கல்லாநத்தம் ஊராட்சி ஏரி வியாழக்கிழமை நிரம்பியது.
புயலால் பெய்த மழை காரணமாக வசிஷ்டநதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், தென்னங்குடிபாளையம் ஏரி, அய்யனாா் கோயில் ஏரிகள் நிரம்பின. இதையடுத்து கல்லாநத்தம் ஏரியும் நிரம்பியது. இதனையடுத்து ஆத்தூா் திமுக ஒன்றியச் செயலாளா் வெ.செழியன், ஒன்றியக் குழு உறுப்பினா் சேகா்,கே.பி.ராஜேந்திரன், காங்கிரஸ் மாவட்ட விவசாய அணி தலைவா் கல்லை கருப்பண்ணன், மணி உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டு ஏரியில் மலா்களை தூவி மகிழ்ச்சி தெரிவித்தனா்.
இதே போல ஆத்தூா் வட்டாத்தில் உள்ள பெரிய ஏரியான பெத்தநாயக்கன்பாளையம் பனை ஏரி நிரம்பியதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.