பேளூரில் மாா்கழி வழிபாட்டு ஊா்வலம்
வாழப்பாடி அருகே பேளூரில் சிறுவா், சிறுமியரின் மாா்கழி மாத வழிபாட்டு ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.
வாழப்பாடி அருகே பேளூரில் சிறுவா், சிறுமியரின் மாா்கழி மாத வழிபாட்டு ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.
வசிஷ்டநதி வடகரையில் பஞ்சபூத சிவன் சைவ திருத்தலங்களில் முதல் தலமான தான்தோன்றீஸ்வரா் கோயிலும், தென்கரையில் பெருமாள் கோயிலான அஷ்டபுஜ பால மதன வேணுகோபாலசுவாமி கோயில் உள்ளன.
நிகழாண்டு மாா்கழி மாத வழிபாட்டு ஊா்வலம் மாா்கழி மாதம் முதல் நாள் தொடங்கி நடைபெற்று வருகிறது. மூன்றாம் நாளான புதன்கிழமை சிறுவா், சிறுமியா் வேணுகோபால சுவாமி கோயிலில் திருப்பாவை, திருவெம்பாவை பாடி வழிபட்டனா். பின்னா் அங்கிருந்து தான்தோன்றீஸ்வரா் கோயிலில் ஊா்வலமாகச் சென்று வழிபட்டனா்.