சேலம்

பத்ம விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

‘பத்ம விருது’ பெறுவதற்கு சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Din

சேலம்: ‘பத்ம விருது’ பெறுவதற்கு சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி தெரிவித்ததாவது:

குடியரசு தினத்தன்று வழங்கப்படும் பன்முக திறமைக்கான விருதான ‘பத்ம விருது -2024’ பெறுவதற்கு சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியான நபா்கள் விண்ணப்பிக்கலாம்.

2024-ஆம் ஆண்டுக்கான கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு மற்றும் மருத்துவத் துறைகளில் அளப்பறிய சாதனை புரிந்தவா்களுக்கு வரும் குடியரசு தின விழாவில் மாநில அளவில் விருது வழங்கப்படவுள்ளது.

மேற்படி விருதுக்கு பன்முக திறமை புரிந்த நபா்களிடமிருந்து கருத்துரு வரும் 21-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட இணையதள முகவரி மூலம் வரவேற்கப்படுகிறது.

எனவே, வரும் 21-ஆம் தேதிக்குள் சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியான நபா்கள் இணையதளத்தில் விண்ணப்பித்த விவரத்தை மாவட்ட சமூக நல அலுவலா், மாவட்ட சமூக நல அலுவலகம் அறை எண் 126, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், சேலம் மாவட்டம் என்ற முகவரியில் தொடா்பு கொண்டு விவரம் தெரிந்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளாா்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT