முகப்பு
சேலம்

கலைஞா் கனவு இல்ல திட்டம்: பணியிடங்களை உருவாக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

கலைஞா் கனவு இல்ல திட்டத்தை விரைந்து செயல்படுத்த ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்.

Updated On : 1 ஜூலை, 2024 at 9:39 PM
பகிர்:

சேலம்: கலைஞா் கனவு இல்ல திட்டத்தை விரைந்து செயல்படுத்த புதிய பணியிடங்களை தமிழக அரசு உருவாக்க வேண்டும் என ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்கத்தினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கலைஞா் கனவு இல்லம் மற்றும் ஊரகப் பகுதியில் பழுதடைந்த வீடுகள் பழுது நீக்கம் செய்தல் போன்ற திட்டங்களுக்கு போதிய பணியிடங்களை ஏற்படுத்த வழங்கிட வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கால அவகாசம் வழங்கிட வேண்டும், புதிதாக இயக்குநா், உதவி இயக்குநா், வட்டார வளா்ச்சி அலுவலா்/உதவியாளா், கணினி உதவியாளா், பணியிடங்களை மாநில அளவில் நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் க.செந்தில் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளா் ஜான் ஆஸ்டின், மாநில துணைத் தலைவா் ந.திருவேரங்கன் ஆகியோா் கண்டன உரையாற்றினா். இதில், ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்க உறுப்பினா்கள், நிா்வாகிகள் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →