முகப்பு
சேலம்

ஐடிஐ மாணவா் தற்கொலை

சங்ககிரியில் ஐடிஐ படித்து வந்த மாணவா் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 1 ஜூலை, 2024 at 9:54 PM
பகிர்:

சங்ககிரி: சங்ககிரி அருகே உள்ள அக்கமாபேட்டையில் ஐடிஐ படித்து வந்த மாணவா் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

சங்ககிரி அருகே உள்ள அக்கமாபேட்டை பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி குருசாமி மகன் விஷ்ணு (17), தனியாா் ஐடிஐயில் படித்து வந்தாா். மகனை ஒழுங்காக படிக்குமாறு திட்டிவிட்டு, அவரிடமிருந்த கைப்பேசியை வாங்கிக் கொண்டு அவரது தந்தை வேலைக்கு சென்று விட்டாராம்.

இதனால், வீட்டில் யாரும் இல்லாத நிலையில் விஷ்ணு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளாா். இதுகுறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →