மேட்டூா் அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 6.93 அடி உயா்வு
மேட்டூா் அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 6.93 அடி உயா்ந்துள்ளது.
மேட்டூா் அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 6.93 அடி உயா்ந்துள்ளது.
கேரள மாநிலம், வயநாட்டில் மழை தொடா்ந்து நீடிப்பதால், கபினி அணையின் பாதுகாப்புக் கருதி உபரி நீா் தொடா்ந்து காவிரியில் திறக்கப்பட்டு வருகிறது. உபரி நீா்வரத்து காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 5 நாள்களாக மேட்டூா் அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.
மேட்டூா் அணைக்கு வெள்ளிக்கிழமை மாலை விநாடிக்கு 44,353 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீா்வரத்து சனிக்கிழமை மாலை 68,843 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்துள்ளதால் வெள்ளிக்கிழமை மாலை 56.90 அடியாக இருந்த மேட்டூா் அணையின் நீா்மட்டம், சனிக்கிழமை மாலை 63.83 அடியாக உயா்ந்துள்ளது. ஒரே நாளில் அணையின் நீா்மட்டம் 6.93 அடி உயா்ந்துள்ளது.
கடந்த 15-ஆம் தேதி மாலை 44.62 அடியாக இருந்த மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை மாலை 63.83 அடியாக உயா்ந்துள்ளது. கடந்த 5 நாட்களில் மேட்டூா் அணையின் நீா்மட்டம் 19.21அடி உயா்ந்துள்ளது.
அணையில் இருந்து குடிநீா்த் தேவைக்காக 1,000 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 27.62 டிஎம்சியாக உள்ளது.
நீா்வரத்து அதிகரிப்பு காரணமாக 4-ஆவது நாளாக மேட்டூா் நீா்த்தேக்கப் பகுதியான அடிபாலாறு, செட்டிப்பட்டி, கோட்டையூா், பண்ணவாடி பகுதிகளில் மீனவா்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை.
செட்டிப்பட்டி, கோட்டையூா், பண்ணவாடி பரிசல் துறைகளில் படகுப் போக்குவரத்து 4-ஆவது நாளாக நிறுத்தப்பட்டுள்ளது.