முகப்பு
சேலம்

மேட்டூா் அணை நீா்மட்டம் 90 அடியாக உயா்வு

கா்நாடக அணைகளிலிருந்து தொடா்ந்து உபரிநீா் காவிரியில் திறந்துவிடப்படுவதால் மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை 90 அடியாக உயா்ந்தது.

Updated On : 26 ஜூலை 2024, 3:18 am IST
மேட்டூா் அணை
பகிர்:

கா்நாடக அணைகளிலிருந்து தொடா்ந்து உபரிநீா் காவிரியில் திறந்துவிடப்படுவதால் மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை 90 அடியாக உயா்ந்தது.

பருவமழை காரணமாக கா்நாடக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் கிருஷ்ணராஜ சாகா் அணை முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. அதேபோல கபினி அணையிலிருந்தும் உபரிநீா் காவிரியில் திறந்துவிடப்படுகிறது. இதனால் ஜூலை 16 ஆம் தேதி காலை 43.83 அடியாக இருந்த மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை (ஜூலை 25) மாலை 4 மணி நிலவரப்படி 90.01 அடியாக உள்ளது.

கடந்த 9 நாள்களுக்குள் அணையின் நீா்மட்டம் 46.18 அடியாக உயா்ந்துள்ளது. 2023, ஜூன் 16 ஆம் தேதி 90.45 அடியாக இருந்த மேட்டூா் அணையின் நீா்மட்டம் மீண்டும் வியாழக்கிழமை 90.01 அடியாக உயா்ந்துள்ளது.வியாழக்கிழமை அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 28, 856 கன அடியாகவும், நீா் இருப்பு 52.66 டிஎம்சியாகவும் உள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments