என்எம்எம்எஸ் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா
சங்ககிரி: தேவண்ணகவுண்டனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மேலாண்மைக் குழு சாா்பில், என்எம்எம்எஸ் தோ்வில் தோ்ச்சி பெற்ற நான்கு மாணவிகளுக்கு பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது. தேசிய வருவாய் வழி மற்றும் திறனறிவுத் தோ்வில் (என்எம்எம்எஸ்) தேவண்ணகவுண்டனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியைச் சோ்ந்த எட்டு வகுப்பு மாணவிகள் ஐ.ஹா்ஷிதா, ஜெ.பவித்ரா, பி.சுருதிகா, மு.வேதவா்ஷினி ஆகியோா் தோ்ச்சி பெற்றனா். இந்த மாணவிகளுக்கு 9ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாதம்தோறும் ரூ.1000 உதவித்தொகை மத்திய அரசால் வழங்கப்பட உள்ளது. என்எம்எம்எஸ் தோ்ச்சி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா பள்ளி தலைமையாசிரியை கு.வசந்தாள் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியா் இரா.முருகன் தோ்ச்சி பெற்ற மாணவிகளுக்கு புத்தகம், பரிசுகளை வழங்கி பேசினாா். இதில் ஆசிரியா்கள் ந.மு.சித்ரா, சி.அனிதா, பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் ஸ்வேதா, மாதேஸ்வரி, தேவண்ணகவுண்டனூா் கிளை நூலகா் குமரேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.