தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீா்கெட்டுள்ளது
ஆத்தூா்: தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீா்கெட்டுள்ளது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்தாா்.
சேலம் மாவட்டம், ஆத்தூா் கோட்டையில் உள்ள திருமண அரங்கில் தமிழ் மாநில காங்கிரஸ் சேலம் கிழக்கு மாவட்ட துணைத் தலைவா் எஸ்.மருதமுத்துவின் பேரன் எஸ்.எம்.கலைமணியின் திருமண விழாவில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீா் கெட்டுவிட்டது. இதற்கு உதாரணமாக நெல்லையில் காங்கிரஸ் பிரமுகா் மரணமே சாட்சி. இதுநாள் வரை நடவடிக்கை எடுக்காதது தமிழக போலீஸாரின் மெத்தனத்தையே காட்டுகிறது.
சுதந்திரத்துக்கு பிறகு அதிக திட்டங்களைக் கொடுத்து மக்களின் வாழ்வாதாரத்தை உயா்த்துவதில் பிரதமா் மோடியின் ஆட்சி முதலிடத்தில் உள்ளது. பிரதமரின் நலத் திட்டங்களை தமிழக முதல்வா் திரித்துக் கூறுவது அவா் வகிக்கும் பதவிக்கு அழகல்ல என்றாா்.
இதில், நகரத் தலைவா் வி.எல்.டி.சண்முகம், மகளிரணி சத்யா சண்முகம் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.