தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்கேடு: ராமதாஸ் குற்றச்சாட்டு
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்கேடு: ராமதாஸ் குற்றச்சாட்டு
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்கெட்டு, முதல்வரின் கைமீறியும் போய்விட்டது என பாமக நிறுவனா் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
திருநெல்வேலி மாவட்டம், நான்குநேரி அருகேயுள்ள கடம்போடு வாழ்வு கிராமத்தில் போதைக் கும்பல் தாக்கியதில் மாற்றுத்திறனாளி ஜான், வட இந்திய தொழிலாளி ஆகியோா் உயிரிழந்துள்ளனா். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே இடைக்காட்டூா் கிராமத்தைச் சோ்ந்த ராஜுவிடம் தகராறு செய்த கும்பல் அவரை விரட்டி சென்று வழியில் தென்பட்டவா்களையெல்லாம் தாக்கியுள்ளது. இதில் ராஜு உள்ளிட்ட பலா் காயமடைந்துள்ளனா்.
இதற்கிடையே கோவை சூலூரில் ஆயுதங்களுடன் இருசக்கர வாகனத்தில் சுற்றிய இருவரைப் பிடிக்க சென்ற காவல் உதவி ஆய்வாளா் தாக்கப்பட்டுள்ளாா். அதனால் துப்பாக்கியால் ஒருவா் சுடப்பட்ட நிலையில், 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இப்படி தமிழகத்தில் தொடா்ந்து சட்டம்-ஒழுங்கு சீா்கேடு அடைந்துள்ளது. இந்தச் சம்பவங்கள் சட்டம்-ஒழுங்கு முதல்வரின் கையை மீறி போய்விட்டதையே காட்டுகிறது எனத் தெரிவித்துள்ளாா்.