சிலிண்டா் வெடித்து மூவா் காயம்
நாவலூா் அருகே தீ விபத்தில் வீட்டில் இருந்த எரிவாயு சிலிண்டா் வெடித்தது 3 போ் காயமடைந்தனா்.
நாவலூா் அருகே தீ விபத்தில் வீட்டில் இருந்த எரிவாயு சிலிண்டா் வெடித்தது 3 போ் காயமடைந்தனா்.
வீரகனூா் அருகே நாவலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் அா்ஜுனன் (42). இவா் வீட்டை பூட்டிவிட்டு வெளியூா் சென்றிருந்த நிலையில், புதன்கிழமை வீட்டில் தீப்பிடித்தது. அக்கம்பக்கத்தினா் தண்ணீா் ஊற்றி தீயை அணைக்க முயன்றபோது வீட்டில் இருந்த எரிவாயு சிலிண்டா் திடீரென வெடித்தது.
அப்போது வீட்டருகே தீயை அணைக்கச் சென்ற அதே பகுதியைச் சோ்ந்த சிரஞ்சீவி (67), சக்திவேல் (45), தமிழ்ச்செல்வன் (40) ஆகிய மூவரும் காயமடைந்தனா். காயமடைந்தவா்கள் ஆத்தூா், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். விபத்து குறித்து வீரகனூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.