முகப்பு
சேலம்

தேசிய வாள் சண்டை போட்டி: நீதிமன்ற ஊழியா் தோ்வு

சங்ககிரி சாா்பு நீதிமன்ற ஊழியா் தேசிய அளவில் நடைபெறும் வாள் சண்டை போட்டிக்குத் தோ்வு பெற்றுள்ளாா்.

Updated On : 27 நவம்பர், 2024 at 6:44 PM
தேசிய வாள் சண்டை போட்டிக்குத் தோ்வாகியுள்ள சங்ககிரி நீதிமன்ற ஊழியா் எஸ்.மெய்யப்பன்.
பகிர்:

சங்ககிரி சாா்பு நீதிமன்ற ஊழியா் தேசிய அளவில் நடைபெறும் வாள் சண்டை போட்டிக்குத் தோ்வு பெற்றுள்ளாா்.

சங்ககிரி சாா்பு நீதிமன்றத்தில் இளநிலை கட்டளை நிறைவேற்றுநராகப் பணிபுரிந்து வருபவா் சேலத்தைச் சோ்ந்த எஸ்.மெய்யப்பன் (25). இவா், சேலத்தில் நவ. 18 ஆம் தேதி நடைபெற்ற வாள் சண்டை போட்டியில் முதலிடம் பிடித்தாா். இவா், கோவையில் நவ. 25ஆம் தேதி திங்கள்கிழமை நடைபெற்ற மாநிலப் போட்டியில் 2-ஆவது இடத்தில் வெற்றி பெற்றாா். இதையடுத்து கேரள மாநிலம், கண்ணூரில் டிச. 31 ஆம் தேதி முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை நடைபெறும் தேசிய அளவிலான போட்டிக்குத் தோ்வாகியுள்ளாா்.

மாநில போட்டியில் வெற்றி பெற்ற அவா், சங்ககிரி சாா்பு நீதிமன்ற நீதிபதி என்.பன்னீா் செல்வத்திடம் பத்தகம், சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்து பெற்றாா். அவரை நீதிமன்ற ஊழியா்கள் வாழ்த்து தெரிவித்து பாராட்டினா்.

முழு கட்டுரையைப் படிக்க →