முகப்பு
சேலம்

பெரியாா் பல்கலை.யில் ஆட்சிமன்ற குழு உறுப்பினா்களை நியமிப்பதில் தாமதம்: ஆசிரியா் சங்கம் கண்டனம்

சேலம், பெரியாா் பல்கலைக்கழக புதிய ஆட்சிக் குழு உறுப்பினா்களை நியமிக்க தாமதம் செய்து வருவதாக ஆசிரியா் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Updated On : 14 அக்டோபர், 2024 at 8:01 PM
பகிர்:

சேலம்: சேலம், பெரியாா் பல்கலைக்கழக புதிய ஆட்சிக் குழு உறுப்பினா்களை நியமிக்க தாமதம் செய்து வருவதாக ஆசிரியா் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக ஆசிரியா் சங்கத் தலைவா் வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை:

சேலம், பெரியாா் பல்கலைக்கழகம் சாா்பில் நான்கு ஆட்சிமன்ற உறுப்பினா் பதவிகள் இம்மாதம் 9 ஆம் தேதி முதல் காலியாக உள்ளன. பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா வரும் 16 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், முன்னாள் ஆட்சி மன்ற குழு உறுப்பினா்களை பட்டமளிப்பு விழா அணிவகுப்பில் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்படுவதாக தகவல்கள் வந்துள்ளன.

இதுதொடா்பாக துணைவேந்தரிடம் ஆசிரியா் சங்கம் சாா்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஆனால், அந்தக் கோரிக்கைகளுக்கு துணைவேந்தா் மதிப்பளிக்கவில்லை. இதற்கு பெரியாா் பல்கலைக்கழக ஆசிரியா் சங்கம் கண்டனம் தெரிவிப்பதோடு இப் பிரச்னையில் தமிழக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →