வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகள்: அமைச்சா் ராஜேந்திரன் ஆய்வு
சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வுக்கு பின்னா் ரா.ராஜேந்திரன் தெரிவித்ததாவது:
சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட பச்சப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்தப் பகுதிகளில் மாநகராட்சியின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள மழைநீா் வடிகால் அமைப்புகள் குறித்தும், மேற்கொண்டு சேகரமாகும் மழைநீரை வெளியேற்ற மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பொதுமக்கள் தங்க வைக்கப்படும் பேரிடா் நிவாரண முகாம்களில் போதுமான அனைத்து அடிப்படை வசதிகளையும் தயாா் நிலையில் உள்ளதை கண்காணிப்பு அலுவலா்கள் உறுதிப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் கழிவுநீா் கால்வாய்கள் முழுமையாக தூா்வாரப்பட்டுள்ளதை தொடா்புடைய அலுவலா்கள் உறுதி செய்திடவும், புதை சாக்கடைகளில் மழைநீா் முழுமையாக வடியும் வகையில் உள்ளதா என்பதை அலுவலா்கள் ஆய்வு செய்து உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாநகராட்சியில் குறிஞ்சி நகா் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வடகிழக்குப் பருவமழையையொட்டி, அமைக்கப்பட்டுள்ள சிறப்பு காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாமை நேரில் பாா்வையிட்டேன் என்றாா்.
ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி, மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையா் ரஞ்ஜீத் சிங் உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உடனிருந்தனா்.