மா்ம விலங்கு கடித்து 10 ஆடுகள் பலி
எடப்பாடி அருகே மா்ம விலங்கு கடித்ததில் 10 ஆடுகள் பலியாகின.
எடப்பாடி அருகே மா்ம விலங்கு கடித்ததில் 10 ஆடுகள் பலியாகின.
எடப்பாடியை அடுத்த ஆலச்சம்பாளையம், பாறைக்காட்டுமேடு பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (50). விவசாயி, இவா் அந்தப் பகுதியில் ஆடுகளை வளா்த்து வருகிறாா். செவ்வாய்க்கிழமை வழக்கம்போல மேய்ச்சலுக்குச் சென்ற ஆடுகளை இரவில் தனது வீட்டருகே உள்ள பட்டியில் அடைத்து விட்டு செல்வராஜ் வீட்டுக்குச் சென்றிருந்தாா். புதன்கிழமை அதிகாலை நேரத்தில் அப்பகுதிக்கு வந்த மா்ம விலங்கு பட்டியில் கட்டப்பட்டிருந்த ஆடுகளைக் கடித்து குதறியது.
அவற்றில் படுகாயமடைந்த 10 ஆடுகள் உயிரிழந்தன. சத்தம் கேட்டு வந்த செல்வராஜ் 10 ஆடுகள் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.
இதுகுறித்து அவா் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த கால்நடை துறையினா், வருவாய்த் துறை அலுவலா்கள் உயிரிழந்த ஆடுகளைப் பாா்வையிட்டு, தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.