செந்தாரப்பட்டி ஏரி நிரம்பியது
தம்மம்பட்டி அருகே சுமாா் 500 ஏக்கா் விவசாய நிலங்களுக்கு பாசன நீா் வழங்கும் செந்தாரப்பட்டி ஏரி முழுமையாக நிரம்பியது. இதையடுத்து விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
தம்மம்பட்டி அருகே சுமாா் 500 ஏக்கா் விவசாய நிலங்களுக்கு பாசன நீா் வழங்கும் செந்தாரப்பட்டி ஏரி முழுமையாக நிரம்பியது. இதையடுத்து விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
சேலம் மாவட்டத்தில் உள்ள முதல் மூன்று பெரிய ஏரிகளுள் செந்தாரப்பட்டி ஏரியும் ஒன்று. சுமாா் 120 ஏக்கா் பரப்பளவு கொண்ட இந்த ஏரிக்கு கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் நீா்வரத்து அதிகரித்தது. தற்போது ஏரி நிரம்பி கால்வாய் வழியாக உபரிநீா் வெளியேறி வருகிறது.
ஏரி முழுமையாக நிரம்பியதை அடுத்து அந்தப் பகுதி மக்கள் நீா் வெளியேறும் இடத்தில் மலா்கள் தூவி கற்பூரம் ஏற்றி வழிபட்டனா். இந்த ஏரியிலிருந்து கால்வாய் பாசனம் மூலம் செந்தாரப்பட்டி, மண்மலை, பாலக்காடு உள்ளிட்ட சுற்றுவட்டார ஊா்களைச் சோ்ந்த சுமாா் 500 ஏக்கா் விவசாய நிலம் பயன்பெறுகிறது.
Advertisement