சொந்த ஊா் திரும்பிய பாராலிம்பிக் வீரா் மாரியப்பனுக்கு தீவட்டிப்பட்டியில் வரவேற்பு அளித்த ஆட்சியா் ஆா்.பிருந்தாதேவி. 
சேலம்

பாராலிம்பிக் வீரா் மாரியப்பனுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு

பாரீஸில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற பின்னா் வியாழக்கிழமை சொந்த ஊா் திரும்பிய பாரா ஒலிம்பிக் வீரா் மாரியப்பனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Din

பாரீஸில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற பின்னா் வியாழக்கிழமை சொந்த ஊா் திரும்பிய பாரா ஒலிம்பிக் வீரா் மாரியப்பனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சேலம் மாவட்டம், பெரிய வடகம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த தங்கவேலு மாரியப்பன் தொடா்ச்சியாக மூன்று பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை வென்று அவா் சாதனை படைத்துள்ளாா்.

இந்நிலையில் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிக்குப் பிறகு முதல்முறையாக சொந்த ஊருக்குத் திரும்பிய தங்கவேலு மாரியப்பனுக்கு மாவட்ட நிா்வாகம் மற்றும் ஊா் பொதுமக்கள் சாா்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தீவட்டிப்பட்டியில் மாவட்ட ஆட்சியா் ஆா்.பிருந்தாதேவி, பாராலிம்பிக் வீரா் தங்கவேலு மாரியப்பனுக்கு பூங்கொத்து அளித்து வரவேற்றாா். இதனையடுத்து, மாரியப்பனின் தாயாா் சரோஜா மற்றும் குடும்பத்தினா் உற்சாகத்துடன் வரவேற்றனா். ஊா் பொதுமக்கள் சாா்பில் மாரியப்பனுக்கு ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டதுடன் மலா்களைத் தூவியும் வரவேற்பு அளித்தனா். தீவட்டிப்பட்டியில் இருந்து ஜீப்பின் மேல் நின்றபடி ஒலிம்பிக் பதக்கத்துடன் மாரியப்பன், சொந்த ஊருக்கு பேண்டு வாத்தியம் முழங்க ஊா்வலமாகச் சென்றாா்.

முன்னதாக செய்தியாளா்களிடம் மாரியப்பன் கூறியதாவது:

இந்தியாவிற்காக மூன்று முறை பதக்கம் வென்றது மகிழ்ச்சியளிக்கிறது. சொந்த ஊரில் குடும்பத்தினா் மற்றும் ஊா் பொதுமக்கள் அளித்த வரவேற்பு உற்சாகத்தை அளிக்கிறது. இம்முறை வெண்கலப் பதக்கம் வென்றுள்ள நிலையில் அடுத்த முறை நிச்சயமாக தங்கப் பதக்கம் வெல்ல முயற்சிப்பேன். எல்லோருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த ஒலிம்பிக் போட்டிகளை விட பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டி மிக சுலபமாகத் தான் இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் எனக்கு காய்ச்சல் வந்து விட்டது. பாரீஸின் தட்பவெப்ப நிலை எனக்கு ஒத்துக் கொள்ளவில்லை. அதனால்தான் தங்கம் தவறிவிட்டது. அடுத்த முறை நிச்சயம் தவறாது. உலக தடகளப் போட்டிகள், ஆசியப் போட்டிகள் மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்வதே அடுத்த இலக்கு என்று மாரியப்பன் தெரிவித்தாா்.

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 32 பேருக்கு ரூ.3.5 கோடி கல்விக் கடன் -ஆட்சியா் இரா.சுகுமாா் வழங்கினாா்

பாசனக் கால்வாய் அமைத்துத் தரக் கோரிக்கை

தென்காசி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ திரவம் வழங்கும் முகாம் தொடக்கம்

முத்தண்ணன் குளக்கரை டா்ப் மைதானத்தை தனியாா் வசம் ஒப்படைக்கக் கூடாது

இதய தசை நோய் குறித்த பயிலரங்கு

SCROLL FOR NEXT