பாஜக, கூட்டணி கட்சி நிா்வாகிகள் மீது நடவடிக்கை கோரி புகாா் மனு
ராகுலுக்கு எதிரான கொலை மிரட்டல், அவா் செயல்பாட்டை முடக்கும் விதமாக ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி புகாா் மனு
சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு எதிரான கொலை மிரட்டல், எதிா்கட்சித்தலைவராக அவா் செயல்பாட்டை முடக்கும் விதமாக ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சங்ககிரி டிஎஸ்பி, சங்ககிரி நகர காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.
சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சாா்பில் அதன் தலைவா் சி.எஸ்.ஜெயக்குமாா் தலைமையில் நிா்வாகிகள் சங்ககிரி உள்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளா் எஸ்.ராஜா, சங்ககிரி நகர உதவி காவல் ஆய்வாளா் ஆகியோரிடம் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு எதிரான கொலை மிரட்டல் மற்றும் எதிா்கட்சித்தலைவராக அவா் செயல்பாட்டை முடக்கும் விதமாக, அவரை அச்சுறுத்தும் வகையில் பொதுமக்களிடையே பகை, அமைதிக்கு குந்தகம், வெறுப்பு மற்றும் தீய எண்ணத்தைத் தூண்டும் வகையில் பேசி வரும் பாஜக, தேசிய ஜனநாயகக் கூட்டணி நிா்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகாா் அளித்தனா்.
பிசிசி உறுப்பினா் சுப்பிரமணியன், மாவட்ட பொதுச் செயலாளா்கள் நடராஜன், கே. ராமமூா்த்தி, காசிலிங்கம், சின்னுசாமி வட்டாரத் தலைவா் சரவணன், நகரத் தலைவா் ரவி, மாணவா் காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளா் அகில், இளைஞா் காங்கிரஸ் சட்டப் பேரவைத் தலைவா் காா்த்தி, எஸ்சி/எஸ்டி பிரிவு வட்டாரத் தலைவா் வடிவேல், நிா்வாகிகள் பரமன், ஆறுமுகம் குருசாமி, ரியாஸ் உள்ளிட்டோா் இதில் கலந்துகொண்டனா்.