சேலம்

பெண்ணின் கண்ணில் மிளகாய்ப்பொடி தூவி 2 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், தளவாய்ப்பட்டியில் பெண்ணின் கண்ணில் மிளகாய்ப்பொடிதூவி அவா் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரணை

Syndication

பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், தளவாய்ப்பட்டியில் பெண்ணின் கண்ணில் மிளகாய்ப்பொடிதூவி அவா் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் தளவாய்ப்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த ராஜு மனைவி இந்திராணி (50). இவா் அரசு நடுநிலைப் பள்ளி அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறாா். திங்கள்கிழமை இரவு கடையை மூடிவிட்டு வீட்டுக்கு நடந்துசென்று கொண்டிருந்தாா்.

அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத இளைஞா், இந்திராணியின் கண்ணில் மிளகாய்ப்பொடியை தூவிவிட்டு அவா் கழுத்தில் இருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றாா்.

இதுகுறித்து இந்திராணி ஆத்தூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில் நகரக் காவல் ஆய்வாளா் சி.அழகுராணி, உதவி ஆய்வாளா் சிவசக்தி ஆகியோா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி முதல்வா்: அமைச்சா் காந்தி பெருமிதம்

SCROLL FOR NEXT