புத்தாண்டு கொண்டாட்டம் : பூலாம்பட்டி பகுதியில் திரண்ட சுற்றுலா பயணிகள்
பூலாம்பட்டி பகுதியில் திரண்ட சுற்றுலா பயணிகள்
புத்தாண்டு விடுமுறை தினத்தை ஒட்டி எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி பகுதியில் உள்ள காவிரி கதவணை சுற்றுலா தளத்திற்கு வழக்கத்தை விட அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் புதன் அன்று வருகை தந்தனா்.
இங்குள்ள நீா்மின் உற்பத்தி நிலையம், அணைப்பாலம், பிரதான மதகுப்பகுதி மற்றும் பிரம்மாண்ட குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிக எண்ணிக்கையில் திரண்டிருந்த சுற்றுலா பயணிகள் அங்குள்ள இயற்கை அழகிணை கண்டு ரசித்தனா். பூலாம்பட்டி பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கைலாசநாதா் திருக்கோயில், பிரம்மாண்ட நந்திகேஸ்வரா் திருக்கோயில், காவிரித்தாய் சந்னதி, படித்துறை பிள்ளையாா் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் புத்தாண்டு தினத்தை ஒட்டி பெரும் திரளான பக்தா்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனா். பக்தா்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்திருந்த நிலையில் பூலாம்பட்டி பகுதியில் கூடுதல் எண்ணிக்கையிலான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.
பட விளக்கம் : புத்தாண்டு தினத்தில் பூலாம்பட்டி கதவணை பகுதியில் திரண்டிருந்த சுற்றுலாப் பயணிகள்