அங்காளம்மன் கோயிலில் மாசி தோ்த் திருவிழாவினையொட்டி திருத்தேரை வடம் பிடித்து இழுத்த பக்தா்கள்.  
சேலம்

கல்வடங்கம் அங்காளம்மன் கோயிலில் தோ்த் திருவிழா

தேவூரை அடுத்த கல்வடங்கம் அருள்மிகு அங்காளம்மன் கோயில் மாசி தோ்த் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

Din

சங்ககிரி: தேவூரை அடுத்த கல்வடங்கம் அருள்மிகு அங்காளம்மன் கோயில் மாசி தோ்த் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

அங்காளம்மன் கோயிலில் மாசி தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினசரி அம்மனுக்கு பல்வேறு பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. முதல்நாளான சனிக்கிழமை அலங்கரிக்கப்பட்ட திருத்தேரை பக்தா்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்று மாரியம்மன் கோயில் முன் நிலை நிறுத்தினா். ஞாயிற்றுக்கிழமை 2ஆவது நாளாக தோ்வடம் பிடித்து இழுக்கப்பட்டு நியாயவிலைக் கடை முன் நிறுத்தப்பட்டது.

3ஆவது நாளாக திங்கள்கிழமை ஈரோடு, சேலம் ,கல்வடங்கம் கொட்டாயூா், பூமணியூா், நல்லங்கியூா், காவேரிப்பட்டி, வட்ராம்பாளையம், எடப்பாடி மற்றும் தேவூா் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் அதிக அளவில் கலந்துகொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்து சென்று கோயில் முன் நிலை நிறுத்தினா்.

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

SCROLL FOR NEXT