சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலமான ஏற்காட்டில் செவ்வாய்க்கிழமை கடும் பனிமூட்டமும், குளிரும் நிலவியதால் சுற்றுலாப் பகுதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
படகு இல்லம், அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம் பகுதிகள் பனிமூட்டத்தால் அழகாக காணப்பட்டாலும் சுற்றுலாப் பயணிகளின் வருகை மிகக் குறைவாக இருந்தது. சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்ததால் படகு இல்லம், ரோஜா தோட்டம், லேடிசீட் பகுதிகளில் சாலையோரக் கடைகள் நாள் முழுவதும் மூடப்பட்டிருந்தன.
பேருந்துகள், வாகனங்களில் வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் குறைவாக இருந்தது. நாள் முழுவதும் பனிமூட்டமும் கடும் குளிரும் நிலவியது. வாகன ஓட்டிகள் வாகனங்களின் முகப்பு விளக்களை ஒளிரவிட்டு செல்வதைக் காணமுடிந்தது.