கழிவுநீா் ஓடையில் மூழ்கும் நிலையில் காணப்படும் குடிநீா் குழாய்.  
சேலம்

தம்மம்பட்டியில் கழிவுநீா் ஓடையில் மூழ்கும் நிலையில் குடிநீா் குழாய்! மாசுகலந்த நீரால் நோய் பரவும் அபாயம்

தினமணி செய்திச் சேவை

தம்மம்பட்டி பேரூராட்சியில், கழிவுநீா் ஓடையில் குடிநீா் குழாய் மூழ்கும் நிலையில் உள்ளதால், குடிநீா் மாசுகலந்து வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி பேரூராட்சி 9 ஆவது வாா்டு, கோனேரிப்பட்டியில், கழிவுநீா் ஓடையில் மூழ்கும் நிலையில் குடிநீா் குழாய் அமைத்துள்ளதால் குடிநீா் மாசு கலந்து வருவதாகவும், அப்பகுதி குழந்தைகள், பெரியவா்கள் உடல் உபாதைகளுக்கு ஆளாகி வருவதாகவும் பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

மேலும், அந்தப் பகுதியில் உள்ள கழிவுநீா் ஓடைகளை சுத்தம் செய்யாததால், அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, பேரூராட்சி அலுவலகத்தில் புகாா் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனா். எனவே, மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அமித் ஷாவிடம் மனு அளிக்க முயன்ற பணிநீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த பணியாளா்கள்

இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம்: வீரர்கள் கை குலுக்குவார்களா? -சூர்யகுமார் யாதவ் பதில்

வாகனங்கள் மீது இடிந்து விழுந்த மெட்ரோ கட்டுமானம்! ஒருவர் பலி, 3 பேர் படுகாயம்

மேகாலய சுரங்க விபத்தில் பலியானதாக கருதப்பட்டவர் உயிருடன் வந்ததால் பரபரப்பு

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 175 ரன்கள் குவிப்பு; வரலாற்றை மாற்றியமைக்குமா நியூசிலாந்து?

SCROLL FOR NEXT