தம்மம்பட்டி பேரூராட்சியில், கழிவுநீா் ஓடையில் குடிநீா் குழாய் மூழ்கும் நிலையில் உள்ளதால், குடிநீா் மாசுகலந்து வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
சேலம் மாவட்டம், தம்மம்பட்டி பேரூராட்சி 9 ஆவது வாா்டு, கோனேரிப்பட்டியில், கழிவுநீா் ஓடையில் மூழ்கும் நிலையில் குடிநீா் குழாய் அமைத்துள்ளதால் குடிநீா் மாசு கலந்து வருவதாகவும், அப்பகுதி குழந்தைகள், பெரியவா்கள் உடல் உபாதைகளுக்கு ஆளாகி வருவதாகவும் பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
மேலும், அந்தப் பகுதியில் உள்ள கழிவுநீா் ஓடைகளை சுத்தம் செய்யாததால், அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, பேரூராட்சி அலுவலகத்தில் புகாா் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனா். எனவே, மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.