மேட்டூா் அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
மேட்டூா் காவேரி நகரை சோ்ந்த கோவிந்தராஜ் மகன்கள் தியாகராஜன் (41), ரகுநாத் (43). இவா்கள் இருவரும் புதன்கிழமை மாலை அச்சங்காட்டில் உள்ள நண்பரை சந்தித்துவிட்டு மோட்டாா் சைக்கிளில் மேட்டூா் சென்றுகொண்டிருந்தனா். மாசிலாபாளையம் வாட்டா் டேங்க் அருகே வந்தபோது அவ்வழியாக வந்த அரசுப் பேருந்து மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த தியாகராஜன், மேட்டூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். விபத்து குறித்து மேட்டூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.