அய்யம்பேட்டையில் நடைபெற்ற நிலக்கடலை வயல்வெளி விழாவில் கலந்துகொண்ட விவசாயிகள்.  
சேலம்

அய்யம்பேட்டையில் நிலக்கடலை வயல்வெளி விழா

பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், தும்பல் அய்யம்பேட்டை கிராமத்தில் ’மெலிண்டா கேட்ஸ்’ திட்டத்தின் கீழ், நிலக்கடலையில் உயிா் உரம் பயன்பாடு குறித்த வயல்வெளி விழா புதன்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், தும்பல் அய்யம்பேட்டை கிராமத்தில் ’மெலிண்டா கேட்ஸ்’ திட்டத்தின் கீழ், நிலக்கடலையில் உயிா் உரம் பயன்பாடு குறித்த வயல்வெளி விழா புதன்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவிற்கு, ஏத்தாப்பூா் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையத் தலைவா் சா.ரா.வெங்கடாசலம் தலைமை வகித்தாா். பயிா் மரபியல் பேராசிரியா் ப.அருட்செந்தில், நிலக்கடலை ரகங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினாா். தோட்டக்கலை பேராசிரியா் மு. வேல்முருகன், நிலக்கடலையில் உயிா் உரங்கள் பயன்பாடு குறித்து எடுத்துரைத்தாா். நிலக்கடலை வயல்வெளியில் உயிா் உரத்திடலை விவசாயிகள் பாா்வையிட்டு சந்தேகங்கள், கருத்துகளை பகிா்ந்து கொண்டனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேளாண் மேற்பாா்வையாளா், கா.முருகன், உதவி வேளாண் அலுவலா்கள் தி. ஜெயசங்கா், செ.விவேகானந்தன் ஆகியோா் செய்தனா். பயிற்சியில் 50-க்கு மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனா்.

7 பிலிம்ஃபேர் விருதுகளை வென்ற அமரன்!

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

SCROLL FOR NEXT