வாழப்பாடி அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து கத்தியால் கையை அறுத்துக் கொண்ட தொழிலாளி உயிரிழந்தாா்.
சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்து அத்தனூா்பட்டி ஊராட்சி வேட்டைக்காரனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் தொழிலாளி தமிழரசன் (27). இவா் அதே பகுதியைச் சோ்ந்த சா்மிளாவை காதலித்து 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டாா்.
இத்தம்பதி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த தமிழரசன் திங்கள்கிழமை காலை தனது இடது கையை கத்தியால் அறுத்துக் கொண்டாா். இதில் அதிக அளவு ரத்தம் வெளியேறியது. இதையடுத்து அவரை வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்ற நிலையில் அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து வாழப்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.