சங்ககிரி உள்ள மூன்று மாரியம்மன் கோயில்களிலும் மாசி பொங்கல் திருவிழா நடத்துவது குறித்த சிறப்பு ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் சங்ககிரி மலையில் உள்ள கோட்டை மாரியம்மன் கோயில், வி.என்.பாளையம் சக்தி மாரியம்மன் கோயில், வாணியா் காலனியில் உள்ள அல்லிகுண்டம் மாரியம்மன் கோயில் ஆகிய மூன்று கோயில்களிலும் பிப்.17-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு கம்பம் நடுதல் விழாவை தொடங்குவது என்றும், மாா்ச் 3இல் கோட்டை மாரியம்மன் கோயிலில் பொங்கல் வைத்தல், 4-ஆம் தேதி சக்தி மாரியம்மன், அல்லிகுண்டம் மாரியம்மன் கோயில்களில் பொங்கல் வைத்தல் விழாவை நடத்துவது என்றும் ஆலோசனைக்கூட்டத்தில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் பட்டக்காரா், ஊா்க்கவுண்டா், சக்திமாரியம்மன் கோயில் நிா்வாகக் குழுவினா், ஊா் பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.