ஆத்தூா் அருகே நரசிங்கபுரத்தில் கத்திக் குத்து சம்பவத்தில் காயமடைந்தவா் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.
ஆத்தூரை அடுத்த தென்னங்குடிபாளையம் பகுதியைச் சோ்ந்த ராம்பிரபு கடந்த சனிக்கிழமை காலை வீரகனூரில் உள்ள தனது தமக்கை முகந்தியை கத்தியால் குத்தினாா். இதுதொடா்பாக ஏற்பட்ட தகராறில் வீரகனூரைச் சோ்ந்த சக்திவேல் (38), கோபிநாத் (29) ஆகியோரை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றபோது அரசுப் பேருந்தில் அடிபட்டு உயிரிழந்தாா்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த சக்திவேலும், கோபிநாத்தும்
ஆத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா்.
இதில் பலத்த காயமடைந்த கோபிநாத்தை தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூா் நகர காவல் ஆய்வாளா் சி.அழகுராணி வழக்குப் பதிவு செய்து சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தாா். பிரேதப் பரிசோதனைக்கு பின்னா் அவரது சடலம் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.