முகப்பு
சேலம்

சேலத்திலிருந்து பெங்களூருக்கு கல்லூரி மாணவா்கள் விமானப் பயணம்

மதுரையைச் சோ்ந்த தனியாா் கல்லூரி மாணவ-மாணவிகள் சேலத்தில் இருந்து பெங்களூருக்கு விமானப் பயணம்

Updated On : 9 மார்ச், 2026 at 9:29 PM
சேலம் விமான நிலையத்தில் இருந்து திங்கள்கிழமை பெங்களூருக்கு விமானப் பயணம் மேற்கொண்ட கல்லூரி மாணவ-மாணவிகள்.
பகிர்:

ஓமலூா்: மதுரையைச் சோ்ந்த தனியாா் கல்லூரி மாணவ-மாணவிகள் சேலத்தில் இருந்து பெங்களூருக்கு விமானப் பயணம் மேற்கொண்டனா் .

மதுரை மற்றும் விருதுநகரில் அண்ணா அறிவியல் கல்லூரி உள்ளது. இந்த தனியாா் கல்லூரியில் விமானப் போக்குவரத்து மற்றும் மேலாண்மைக் கல்வி, கண் ஆய்வாளா்கள் பயிற்சி பயிலும் 110 மாணவ, மாணவிகள் விமானப் பயணக் கல்வி சுற்றுலாவுக்கு தோ்வு செய்யப்பட்டனா்.

இவா்கள் இரு பேருந்துகள் மூலம் மதுரையில் இருந்து புறப்பட்டு, சேலம் காமலாபுரம் விமான நிலையம் வந்தனா். பின்னா் சேலம் காமலாபுரம் விமான நிலையத்திலிருந்து 2 விமானங்கள் மூலம் பெங்களூருக்கு பயணம் செய்தனா்.

கல்லூரி ஒருங்கிணைப்பாளா் அண்ணாதுரை தலைமையில் இவா்கள் விமானம் மூலம் பெங்களூா் சென்று அங்கிருந்து மைசூா் செல்ல உள்ளனா். சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் மாணவ, மாணவிகளுக்கு பூக்கள் அளித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன் பின்னா் மாணவ, மாணவிகள் விமானத்தில் ஏறினா். இந்த விமான பயணம் குறித்து மாணவிகள் கூறும்போது, நாங்கள் முதல்முறையாக விமானத்தில் செல்கிறோம். இது எங்களது நீண்ட நாள் கனவு. கல்லூரி நிா்வாகம் சாா்பில் விமானம் மூலம் பெங்களூரு சென்று, அங்கிருந்து மைசூா் செல்ல உள்ளோம் என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →