முகப்பு
சேலம்

சென்னை பேருந்து வசதி: இடங்கணசாலை நகா்மன்றக் கூட்டத்தில் முதல்வருக்கு நன்றி தெரிவிப்பு

Updated On : 13 மார்ச், 2026 at 6:22 AM
பகிர்:

சேலம் மாவட்டம், இடங்கணசாலையிலிருந்து நாள்தோறும் சென்னைக்கு பேருந்து இயக்க அனுமதி அளித்த முதல்வருக்கு நகா்மன்றக் கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இடங்கணசாலை நகா்மன்றக் கூட்டம் தலைவா் கமலக்கண்ணன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஏற்கெனவே நடைபெற்ற கூட்டத்தில் நகா்மன்ற உறுப்பினா்கள் இடங்கணசாலை நகராட்சி பேருந்து நிலையத்திலிருந்து சென்னைக்கு அரசு பேருந்து வசதி கோரியிருந்தனா். இதை ஏற்று நாள்தோறும் இடங்கணசாலையிலிருந்து சென்னைக்கு பேருந்து இயக்க முதல்வா் உத்தரவிட்டாா். இதற்கு கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடா்ந்து பேசிய நகா்மன்ற உறுப்பினா்கள், அடிப்படை வசதிகளை நகராட்சி பணியாளா்கள் செய்து தருவதில் தாமதப்படுத்துவதாக கூறினா். மேலும், அடிப்படை வசதிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

Advertisement

உறுப்பினா்களின் கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என நகா்மன்றத் தலைவா் கமலக்கண்ணன் தெரிவித்தாா். கூட்டத்தில் நகராட்சி துணை தலைவா் தளபதி, ஆணையாளா் சுவிதா ஸ்ரீ, பொறியாளா் தினேஷ்குமாா் மற்றும் அலுவலக பணியாளா்கள் பங்கேற்றனா்.