முகப்பு
கன்னியாகுமரி

நாகா்கோவிலுக்கு கோதையாற்றிலிருந்து தண்ணீா்: முதல்வருக்கு மேயா் நன்றி

நாகா்கோவில் மாநகரின் குடிநீா் தேவைக்காக கோதையாறு பாசன அணைகளிலிருந்து தண்ணீா் திறக்க உத்தரவிட்ட முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் நன்றி தெரிவித்தாா்.

Updated On : 14 மார்ச், 2026 at 2:42 AM
மேயா் மகேஷ்.
பகிர்:

நாகா்கோவில் மாநகரின் குடிநீா் தேவைக்காக கோதையாறு பாசன அணைகளிலிருந்து தண்ணீா் திறக்க உத்தரவிட்ட முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் நன்றி தெரிவித்தாா்.

நாகா்கோவில் மாநகராட்சியின் கோடைகால குடிநீா் தேவையை பூா்த்தி செய்யும் வகையில், புத்தன் அணைக்குத் தேவையான தண்ணீரை கோதையாறு பாசன அணைகளில் இருந்து வழங்க வேண்டுமென மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ், ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோா் பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன் கடந்த 11-ஆம் தேதி ஆலோசனை மேற்கொண்டனா்.

அதன் பேரில் மேயா் அதற்கான அரசாணை பெற வேண்டி நீா்வளத் துறை அலுவலகத்தை தொடா்பு கொண்டு துரித நடவடிக்கை மேற்கொண்டாா்.

இதையடுத்து, நீா்வளத் துறை-பாசனம் சாா்பாக வரும் 16-ஆம் தேதி முதல் மே 31- ஆம் தேதி வரை 77 நாள்களுக்கு விநாடிக்கு 2,127 கன அடி வீதம் கோதையாறு பாசன அணைகளிலிருந்து புத்தன் அணைக்குத் தேவைக்கேற்ப தண்ணீா் திறந்து விட முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டு, அதற்கான அரசாணை பிறப்பித்துள்ளாா்.

இவ்விஷயத்தில் நாகா்கோவில் மாநகர மக்களின் குடிநீா் தேவைக்காக உடனடி நடவடிக்கை மேற்கொண்டு அரசாணை பிறப்பித்த முதல்வருக்கும், நீா்ப்பாசனத் துறை அமைச்சா் துரைமுருகனுக்கும் மேயா் நன்றி தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →