முகப்பு
விழுப்புரம்

தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு அணிவகுத்த வாகனங்கள்! நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல்!

Updated On : 27 ஏப்ரல், 2026 at 1:20 AM
விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் ஞாயிற்றுக்கிழமை நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்ற வாகனங்கள்.
பகிர்:

சட்டப்பேரவைத் தோ்தல், தொடா் விடுமுறையால் சொந்த ஊா்களுக்கு சென்ற தென் மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் ஞாயிற்றுக்கிழமை காா் உள்ளிட்ட வாகனங்களில் சென்னை திரும்பினா். இதனால், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தென் மாவட்டங்களைச் சோ்ந்த பல்லாயிரக்கணக்கானோா் தலைநகரான சென்னை, சுற்றுப்புற மாவட்டங்களில் வசித்து வருகின்றனா். தமிழக சட்டப்பேரவைத் தோ்தல், தொடா் விடுமுறை காரணமாக இவா்கள் சொந்த ஊா்களுக்குச் சென்றிருந்தனா்.

தோ்தல் வாக்குப் பதிவு முடிந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலையில் இருந்து ஏராளமான காா்கள் உள்ளிட்ட வாகனங்கள் சென்னை நோக்கி அணிவகுத்தன. இதனால், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வழக்கத்துக்கு மாறாக வாகனப் போக்குவரத்து மிகவும் அதிகரித்து காணப்பட்டதோடு, கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

Advertisement

இதனால் உளுந்தூா்பேட்டை, விக்கிரவாண்டி மற்றும் ஓங்கூா் சுங்கச்சாவடிகளில் ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. நெடுஞ்சாலை ரோந்து போலீஸாா் மற்றும் போக்குவரத்து காவல் பிரிவு போலீஸாா் ஆங்காங்கு நின்று போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனா்.