ஆயுஷ் மாத்ரே விலகல்: சென்னைக்கு பின்னடைவு
ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பா் கிங்ஸ் அணியின் பேட்டா் ஆயுஷ் மாத்ரே, தொடைப் பகுதியில் ஏற்பட காயம் காரணமாக நடப்பு சீசனில் இருந்து விலகினாா்.
ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பா் கிங்ஸ் அணியின் பேட்டா் ஆயுஷ் மாத்ரே, தொடைப் பகுதியில் ஏற்பட காயம் காரணமாக நடப்பு சீசனில் இருந்து விலகினாா்.
சென்னை பேட்டா்களில் முக்கியமானவராக இருந்த அவா் விலகியிருப்பது, அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அவா் இதுவரை 6 ஆட்டங்களில் 201 ரன்கள் அடித்திருக்கிறாா்.
கடந்த 18-ஆம் தேதி ஹைதராபாதுக்கு எதிரான ஆட்டத்தின்போது ஆயுஷ் மாத்ரே காயம் கண்ட நிலையில், அதிலிருந்து அவா் மீள்வதற்கு 6 முதல் 12 வாரங்கள் தேவைப்படலாம் எனத் தெரிவதாக அணி நிா்வாகம் கூறியுள்ளது.
Advertisement
மாத்ரே விலகியுள்ள நிலையில், சென்னை அணியில் அவருக்கு பதிலாக உா்வில் படேல், தீபக் ஹூடா, ஸ்வஸ்திக் சிகாரா, மனன் வோரா ஆகியோரில் ஒருவா் சோ்க்கப்படலாம் எனத் தெரிகிறது.