ஆயுஷ் மாத்ரே அரைசதம் விளாசல்; பஞ்சாப் கிங்ஸுக்கு 210 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் விளையாடியது.
Advertisement
ஆயுஷ் மாத்ரே அரைசதம்; பஞ்சாப் கிங்ஸுக்கு 210 ரன்கள் இலக்கு!
முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் எடுத்துள்ளது.
அந்த அணியில் அதிகபட்சமாக இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே அரைசதம் விளாசி அசத்தினார். அவர் 43 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ஷிவம் துபே 27 பந்துகளில் 45* ரன்களும் (5 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்), சர்ஃபராஸ் கான் 12 பந்துகளில் 32 ரன்களும் (6 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்) எடுத்தனர். ருதுராஜ் கெய்க்வாட் 28 ரன்களும், சஞ்சு சாம்சன் 7 ரன்களும் எடுத்தனர்.
பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் விஜயகுமார் வைஷாக் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். யுஸ்வேந்திர சஹால், சேவியர் பார்ட்லெட் மற்றும் மார்கோ யான்சென் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடி வருகிறது.