டாப் 3ல் 2 இடங்களைப் பிடித்து சாதனை படைத்த சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மாத்ரே!
சிஎஸ்கேவின் இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே நிகழ்த்திய சாதனை குறித்து...
சிஎஸ்கேவின் இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே இளம் வயதில் சிஎஸ்கே கோட்டையில் அரைசதம் அடித்த சிஎஸ்கே வீராக சாதனை படைத்துள்ளார்.
இந்த சாதனையுடன் 19 வயதுக்குள்ளாக தனிப்பட்ட நபர்களில் அதிகபட்ச ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஆயுஷ் மாத்ரே டாப் 3ல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளார்.
சேப்பாக்கத்தில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்து 209/5 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 18.4 ஓவர்களில் 210/5 ரன்கள் எடுத்து வென்றது.
Advertisement
இந்தப் போட்டியில் சிஎஸ்கேவின் இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே நம்.3ல் களமிறங்கி 43 பந்துகளில் 73 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இதுவரை 19 வயதுக்குள்ளாக அதிகபட்ச ரன்கள் குவித்தவர்களில் வைபவ் சூர்யவன்ஷிக்குப் பிறகு இரண்டு இடங்களையும் ஆயுஷ் மாத்ரே பிடித்துள்ளார்.
19 வயதுக்குள்ளாக அதிக ரன்கள் குவித்த டாப் 3 வீரர்கள்
1. வைபவ் சூர்யவன்ஷி - 101 ரன்கள் (14 ஆண்டுகள், 32 நாள்கள், 2025)
2. ஆயுஷ் மாத்ரே - 94 ரன்கள் (17 ஆண்டுகள், 291 நாள்கள், 2025)
3. ஆயுஷ் மாத்ரே - 73 ரன்கள் (18 ஆண்டுகள், 221 நாள்கள், 2026)