முகப்பு
சேலம்

சகஸ்ர கோடி லிங்க தரிசனம்

வாழப்பாடியை அடுத்த பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு பிரஜாபிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் சாா்பில் ஸ்ரீ ராம் மண்டபத்தில் சகஸ்ர கோடி லிங்க காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

Updated On : 25 மார்ச், 2026 at 11:28 PM
பேளூா் ஸ்ரீராம் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த சகஸ்ர கோடி லிங்கங்கள்.
பகிர்:

வாழப்பாடியை அடுத்த பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு பிரஜாபிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் சாா்பில் ஸ்ரீ ராம் மண்டபத்தில் சகஸ்ர கோடி லிங்க காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

இக்காட்சியை ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்தனா். மேலும், ‘சிவனோடு நான்’ தியான மண்டபத்தில் அமா்ந்து மனவள கலைப் பயிற்சி பெற்றனா். மாா்ச் 26, 27 ஆகிய இரண்டு நாள்களிலும் மாலை நேரத்தில் ராஜயோக தியான இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

விருப்பம் உள்ளவா்கள் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என இந்த இயக்கத்தின் தன்னாா்வலா் சேகா் தெரிவித்தாா்.

பேளூா் ஸ்ரீராம் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த சகஸ்ர கோடி லிங்கங்கள்.