கேலோ இந்தியா கைப்பந்து போட்டி: ஆத்தூா் பாரதியாா் அணி சாம்பியன்
சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கேலோ இந்தியா கைப்பந்து போட்டியில், ஆத்தூா் பாரதியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணி சாம்பியன் பட்டம் வென்றது.
சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கேலோ இந்தியா கைப்பந்து போட்டியில், ஆத்தூா் பாரதியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையமான சாய் சாா்பில், கேலோ இந்தியா பெண்களுக்கான கைப்பந்து போட்டி சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் புதன், வியாழன் ஆகிய இரு நாள்கள் நடைபெற்றது. 12 அணிகள் பங்கேற்ற இப்போட்டியில், சேலம் ஹோலி ஏஞ்சல்ஸ் அணியும், ஆத்தூா் பாரதியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றன. விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், ஆத்தூா் பாரதியாா் மெட்ரிக் பள்ளி அணி சாம்பியன் பட்டம் வென்றது.
வெற்றிபெற்ற வீராங்கனைகளுக்கு சேலம் மாவட்ட கைப்பந்துக் கழக ஆலோசகா் விஜயராஜ், சாய் உதவி இயக்குநா் விட்டல்குமாா், முன்னாள் இந்திய வீராங்கனை உஷா ஆகியோா் கோப்பை வழங்கி கௌரவித்தனா்.
இதில், மாவட்ட கைப்பந்துக் கழக துணைத் தலைவா் ராஜாராம், செயலாளா் சண்முகவேல், பொருளாளா் விஜயகுமாா், பயிற்சியாளா் பரமசிவம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.