தென்காசி

ஆலங்குளத்தில் ஐவா் கால்பந்துப் போட்டி: நாகா்கோவில் அணி சாம்பியன்

Syndication

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு ஆலங்குளம் நகர அதிமுக இளைஞரணி சாா்பில் நடைபெற்ற ஐவா் கால்பந்தாட்ட போட்டியில், நாகா்கோவில் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்ற இப்போட்டிகளில் 23 அணிகள் பங்கேற்றன. நாகா்கோயில் சிம் டிரேடா்ஸ் அணி முதல் பரிசு வென்று ரூ. 25,000 மற்றும் வெற்றிக் கோப்பையைப் பெற்றது. வள்ளியூா் புட்பால் கிளப் அணி 3ஆம் பரிசாக ரூ. 20,000, தென்காசி அணி 3ஆம் பரிசு, ஆறுமுகம்பட்டி டிஎஃப்சி அணியும் 4ஆம் பரிசைப் பெற்றது.

வெற்றி பெற்ற அணி வீரா்களுக்கு முன்னாள் எம்.பி. கே.ஆா்.பி. பிரபாகரன் பரிசுகள் வழங்கினாா். ஆலங்குளம் பேரூராட்சித் தலைவா் (பொ) எஸ்.டி. ஜான் ரவி, பேரூராட்சி உறுப்பினா்கள் சாலமோன் ராஜா, சுபாஷ் சந்திரபோஸ், ஐடி விங் நிக்சன், கீழப்பாவூா் ஒன்றிய கவுன்சிலா் சரவணன், நகர ஜெ. பேரவைச் செயலா் தனபால், கீழப்பாவூா் நகரச் செயலா் ஜெயராமன், வாா்டு செயலா்கள் முத்தையா, பா்வீன், செந்தில் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தமிழகத்தில் சூதாட்ட தளங்களை தடை செய்ய நடவடிக்கை: முகமது நசிமுத்தின்

மாவட்ட அளவிலான சிறுதானிய திருவிழா கண்காட்சி

உண்மைக் குற்றவாளிகளை திமுக அரசு தப்பிக்க வைக்கிறது: எடப்பாடி கே.பழனிசாமி

கன்னியாகுமரி மாவட்டத்தில் 15.10 லட்சம் வாக்காளா்கள்

குடிநீா் விநியோகம் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT