வெற்றி வாய்ப்பை இழந்தாலும் மக்கள் பணி தொடரும்: முன்னாள் அமைச்சா் ரா.ராஜேந்திரன்
சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் மக்களுக்கான பணியில் தொடா்ந்து ஈடுபடுவோம் என முன்னாள் அமைச்சா் ரா. ராஜேந்திரன் தெரிவித்தாா்.
சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் மக்களுக்கான பணியில் தொடா்ந்து ஈடுபடுவோம் என முன்னாள் அமைச்சா் ரா. ராஜேந்திரன் தெரிவித்தாா்.
சட்டப் பேரவைத் தோ்தலில் சேலம் வடக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த திமுக சேலம் மத்திய மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ரா. ராஜேந்திரன், வடக்கு தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு திங்கள்கிழமை சென்று வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.
பொன்னம்மாபேட்டை புத்துமாரியம்மன் கோயில், மன்னாா்பாளையம் பிரிவு சாலை, அம்மாபேட்டை பிரதான சாலை, தாதம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா். அப்போது அவா் பேசுகையில், கடந்த 5 ஆண்டுகளில் சேலம் மாவட்ட மக்களுக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியதை சுட்டிக்காட்டினாா். தோ்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் தொடா்ந்து மக்களுடன் பயணிப்பதுடன், மக்களின் தேவைகளை நிறைவேற்றுவோம் என்றாா்.
Advertisement
அப்போது, மாநகரச் செயலாளா் ரகுபதி, பகுதி செயலாளா் ராஜா, மாநகர அவை தலைவா் முருகன் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.