ஸ்ரீவில்லிபுத்தூர், செப். 18: கோரிக்கைகளை வலியுறுத்தி, ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில், பணிநீக்கம் செய்யப்பட்ட சத்துணவு ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும். உணவூட்டு மானியத்தை நபர் ஒன்றுக்கு | 2 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். அனைத்து அரசுத் துறை காலிப் பணியிடங்களில் சத்துணவு ஊழியர்களை பணியமர்த்த வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு சட்டரீதியாக குடும்ப ஓய்வூதியம் வழங்கவேண்டும். ஓய்வுபெற்ற அனைத்து சத்துணவு ஊழியர்களுக்கும் ஓய்வூதியத்தை மாதந்தோறும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, ஒன்றியத் தலைவர் வி. குருசாமி தலைமை வகித்தார். வி. சந்திரசேகர், சி. துரைப்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்வேறு சங்கங்களைச் சேர்ந்தவர்கள் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில், பெண் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.