முகப்பு
மதுரை

விவசாய நிலம் வாங்குவதற்கு ஆதி திராவிட மகளிருக்கு வங்கிக் கடன் மானியம்

தேனி, ஜன. 8:தேனி மாவட்டத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்த மகளிருக்கு விவசாய நிலம் வாங்குவதற்கு தாட்கோ நிறுவனம் மூலம் வங்கிக் கடன் மற்றும் மானியம் வழங்கப்படுகிறது என

மதுரை

விவசாய நிலம் வாங்குவதற்கு ஆதி திராவிட மகளிருக்கு வங்கிக் கடன் மானியம்

தேனி, ஜன. 8:தேனி மாவட்டத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்த மகளிருக்கு விவசாய நிலம் வாங்குவதற்கு தாட்கோ நிறுவனம் மூலம் வங்கிக் கடன் மற்றும் மானியம் வழங்கப்படுகிறது என

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:04 PM
பகிர்:

தேனி, ஜன. 8:தேனி மாவட்டத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்த மகளிருக்கு விவசாய நிலம் வாங்குவதற்கு தாட்கோ நிறுவனம் மூலம் வங்கிக் கடன் மற்றும் மானியம் வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் பூ.முத்துவீரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:இந்தத் திட்டத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்த 18 முதல் 55 வயதுக்கு உள்பட்ட மகளிருக்கு விவசாய நிலம் வாங்குவதற்கு வங்கிக் கடன் மற்றும் மானியம் வழங்கப்படும்.

5 ஏக்கர் வரை புன்செய் நிலம் அல்லது 2.5 ஏக்கர் வரை நன்செய் நிலம் வாங்குவதற்கு அரசு மதிப்பீட்டின்படி அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இதில் 50 சதவீதம் மானியமாகவும், 50 சதவீதம் வங்கிக் கடனாகவும் வழங்கப்படும்.

நிலம் விற்பவர் ஆதி திராவிடர் அல்லாதவராக இருக்க வேண்டும். நிலத்தினை பயனாளியே தேர்வு செய்து, நில உரிமையாளரிடம் விலை பேசி, ரூ.20-க்கான அரசு முத்திரைத் தாளில் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும்.

இந்த திட்டத்தில் நிலம் கிரையம் பெறுவதற்கு முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணம் செலுத்தத் தேவையில்லை. வங்கியில் கடன் பெறுவதற்கு வேறு சொத்துகளின் அடமானம் தேவையில்லை.

மேலும், நிலத்தில் பாசன வசதிகளை மேம்படுத்த 50 சதவீதம் மானியத்தில் ரூ 1 லட்சம் வங்கிக் கடன் பெறலாம். முன்னுரிமை மற்றும் ஒதுக்கீட்டின் அடிப்படையில் இலவச விவசாய மின் இணைப்பு வழங்கப்படும். தகுதியுள்ளவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தாட்கோ மாவட்ட மேலாளரிடம் விண்ணப்பப் படிவங்கள் பெற்றுக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் ஜாதிச் சான்று, வருமானச் சான்று, குடும்ப அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், நில கிரைய ஒப்பந்தம், கணினி பட்டா, வில்லங்கச் சான்று, சிட்டா அடங்கல் மற்றும் வரைபடம், நிலம் விற்பவரின் ஜாதிச் சான்று ஆகியவற்றை இணைத்து தாட்கோ மாவட்ட மேலாளரிடம் வழங்க வேண்டும் என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்ககப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →